ஈரோடு சத்தியமங்கலம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற காவல் துறையினர் வேட்டையன் என்ற முதியவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், துப்பாக்கியை உரிமமின்றி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முதியவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது