ETV Bharat / state

முதியவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல்

author img

By

Published : Sep 26, 2019, 8:22 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே முதியவர் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாட்டுதுப்பாக்கி பயன்படுத்திய முதியவர்

ஈரோடு சத்தியமங்கலம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற காவல் துறையினர் வேட்டையன் என்ற முதியவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், துப்பாக்கியை உரிமமின்றி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முதியவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

Intro:Body:tn_erd_03_sathy_country_gun_vis_tn10009

உரிமமின்றி நாட்டுதுப்பாக்கி -பறிமுதல்: ஒருவர் கைது


டிஎன்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் வேட்டை சாமி கோவில் தோட்டம் என்ற இடத்தில் வனவிலங்குகள் வேட்டையாட பயன்படுத்தும் நாட்டுதுப்பாக்கியுடன் ஒருவர் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப்போது அவ்வழியாக நாட்டு்துப்பாக்கியுடன் திரந்த வேட்டையன் என்பவரை பிடித்து விசாரித்தபோது அரசு உரிமம்இன்றி வேட்டையாடுவதற்கு துப்பாக்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக செயல்பட்ட வேட்டையன்(60) உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டு பன்றியை வேட்டையாட பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, வேட்டையன் என்பவர் மீது பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.