ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த வரப்பாளையம் ஊராட்சியில் உள்ளது, கொண்டயம்பாளையம். இந்தக் கிராமத்தில் ஊராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொண்டையம் பாளையத்தில் ஒரு வீதியில் உள்ள சோலார் தெருவிளக்கு கம்பத்தை கீழே தள்ளி, அதில் இருந்த பேட்டரி இன்வெர்ட்டர் மற்றும் விளக்கு ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மணி புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் மதுபோதையில் தெருவிளக்கு கம்பத்தில் இருந்த சோலார் மின் விளக்கை திருடி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்நபரிடமிருந்த சோலார் மின்விளக்கு பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.