ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

author img

By

Published : Jan 9, 2023, 3:14 PM IST

திம்பம் மலைப்பாதை 24ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் சென்ற சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

திம்பம் மலைப் பாதையில் குறுக்கே ஓடிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
திம்பம் மலைப் பாதையில் குறுக்கே ஓடிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்டப் பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

வனப்பகுதியில் வசிக்கும் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 24ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் சிறுத்தை நடமாடியது. சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை சாலையின் குறுக்கே வேகமாக ஓடி, சாலையோர தடுப்பு சுவரைத் தாண்டி குதித்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: சமையல் செய்த போது சேலை தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.