ETV Bharat / state

பாசன கால்வாயில் மீண்டும் கான்கிரீட் பணிகள்: அமைச்சர் பேச்சு என்ன ஆச்சு? - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

author img

By

Published : Jun 27, 2023, 8:26 AM IST

பாசன கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், இரவில் மீண்டும் கான்கிரீட் அமைப்பதற்கான பணி நடைபெற்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers protest against construction of concrete work in irrigation canal Erode after the Ministers assurance the work also continue at night so public continue the protest
அமைச்சர் பொய்யான வாக்குறுதி கொடுத்தாரா என சந்தேகம் எழுகிறது; இரவிலும் தொடர்ந்த மக்கள் போராட்டம்

பாசன கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இரவில் மீண்டும் கான்கிரீட் அமைப்பதற்கான பணி நடைபெற்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின் மூலமாக கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளைத் தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276ஐ ரத்து செய்ய வேண்டும் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசன விவசாயிகள் பெருந்துறை அருகே உள்ள கீழ்பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும், மண் கரை மண் கரையாகவே இருக்க வேண்டும், அரசணை 276ஐ ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், பணிகள் தொடங்கப்பட்ட இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சர் மூலமாக அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்த விதமான உடைப்பு பழுதும் ஏற்படமால் மண் கரையாக உள்ள இடத்தில் அமைச்சரின் உறுதிமொழியை மீறி இரவு நேரத்தில் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இதனை கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாயிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நல்ல நிலையில் இருந்த கால்வாயின் கரையை உடைத்த பகுதியை, மீண்டும் அதே மண்ணைக் கொண்டு பலப்படுத்த வேண்டும், கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ‘வேங்கைவயல் விவகாரத்தில் அரசு குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறது’ - இளமுருகு முத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.