ETV Bharat / state

காரை விரட்டிய யானை: தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!

author img

By

Published : Jan 6, 2020, 3:02 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில், சாலையில் வந்த காரை யானை விரட்டியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

காரை விரட்டிய யானை
காரை விரட்டிய யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் கரும்பு லாரிகள் அதிக அளவில் சென்றுவருகின்றன.

இவ்வழியாக வரும் கரும்பு லாரிகள், எடை அதிகரிப்புக் காரணமாகக் கரும்புகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனைக் கண்ட யானைகள், சில நாள்களாக இரவு நேரங்களில் கரும்புக்காக சாலையில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில், இன்று இரவு ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது, சாலையில் செல்லும் வாகனங்களைத் துரத்தி வாகன ஓட்டிகளை பீதியடைய செய்தது. பின்னர், யானையின் அருகே சென்று நின்ற ஒரு காரை துரத்திய யானை, காரின் முன்பக்கம் முட்டி நின்றது.

காரை விரட்டிய யானை

காரில் சென்றவர்கள், காரை பின்புறமாக நகர்த்தி லாவகமாகத் தப்பித்தனர். மலைப்பாதையில் யானைகள் வாகனங்களைத் துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

வாகன ஓட்டிகள் யானைகளின் அருகே செல்வதும் புகைப்படம் எடுப்பதும் யானையை துன்புறுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் சாலையில் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்!

Intro:Body:tn_erd_02_sathy_elephant_chasing_vis_tn10009

திம்பம் காரை துரத்திய யானை.
வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி முதல் ஆசனூர் வரை 500க்கும் மேற்பட்ட யானைகள் நடமாடுகின்றன. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே திம்பம் மலைப்பாதையில் செல்வதால் யானைகள், சிறுத்தை மற்றும் காட்டெருமைகள் சாதாரமாக உலாவுகின்றன. அண்மையில் கர்நாடகத்தில் இருந்து கரும்புலாரிகளால் காட்டுக்குள் இருந்த யானைகள் சாலையோர முகாமிட்டுள்ளன. இந்த வனப் பகுதியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள் இரவு நேரத்தில் சுற்றி திரிகின்றன. இன்று இரவு ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் உலவிக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதற்கு முயற்சி செய்தது. யானையின் அருகே சென்று நின்ற ஒரு காரை யானை துரத்தியதால் காரில் சென்ற நபர்கள் அச்சம் அடைந்தனர். காரின் முன் புறம் வந்து யானை முட்டி நின்றது. காரில் சென்றவர்கள் லாவகமாக காரை பின் புறம் நோக்கி நகர்த்தி லாவகமாக தப்பித்தனர். மலைப்பாதையில் யானைகள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.