ETV Bharat / state

இலங்கை சூழல் இந்தியாவுக்கு வருவதை தவிர்க்க முடியாது: மத்திய அரசை விளாசிய முத்தரசன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 9:58 PM IST

CPI mutharasan press meet: மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்நிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பு

ஈரோடு: சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பணிகள் மேற்கொண்ட அனைத்து விஞ்ஞானிகளுக்குத் தனது வாழ்த்துகளை.

பின் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆண்டுக்கு 2 கோடி பேர் என 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்றும், ஊழல் குறித்துப் பேசும் பிரதமர் நரேந்திர மோடி ஊழல் தொடர்பாகப் பேசுவதற்கு முன்பு தான் தகுதியானவரா என்று உணர வேண்டும் என்று சாட்டினார்.

மேலும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து வரும் செப்டம்பர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில், சிபிஐ கட்சியின் தலைமையில் தொடர் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தார். தமிழக ஆளுநர், போட்டி அரசாங்கம் செய்து வருவதாகவும், பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டராகச் செயல்படுவதாகவும் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்திவருவதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தியதையும் அதில் பலர் கைதானதைக் குறித்தும் பேசிய முத்தரசன். தமிழ மக்கள் அனைவருமே ஆளுநரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடக்கூடிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கையில் மக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட அதிபர்களை அந்நாட்டு மக்களே விரட்டி அடித்த சூழல் இங்கு நடப்பதைத் தவிர்க முடியாதது என்று பேசிய அவர், இதனால் ஏற்படும் அனைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசும் ஆளுநரும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பரிந்துரை பட்டியலைத் தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் கர்நாடக மாநில அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைப் பின்பற்றி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், கர்நாடக மாநில அரசு தவறான அணுகுமுறை காரணமாக இரு மாநில மோதல் போக்கு உருவாக வழிவகை செய்யும் என்றார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் குறித்துப் பேசிய அவர், திமுக உடனான கூட்டணி பலமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திக்கப் போவதாகவும் சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எருமை மாட்டுக்கு போஸ்டர்.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டிக்க நூதன கவன ஈர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.