ETV Bharat / state

ஈரோடு அருகே கிரேன் வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு!

author img

By

Published : Oct 18, 2022, 4:41 PM IST

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது கிரேன் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரோடு அருகே கிரேன் வாகனம் மோதி தம்பதியினர் உயிரிழப்பு!
ஈரோடு அருகே கிரேன் வாகனம் மோதி தம்பதியினர் உயிரிழப்பு!

ஈரோடு: அருகே மூலப்பாளையம் தீரன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் ஓய்வு பெற்ற வன ஊழியரானவர். இவரது மனைவி பாப்பாத்தி, இருவரும் துக்க நிகழ்விற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஈரோடு காங்கேயம் சாலையில் செட்டிபாளையம் பகுதிக்கு வந்து உள்ளனர்.

அப்போது பின் பக்கமாக வந்த கிரேன் வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அருகே கிரேன் வாகனம் மோதி தம்பதியினர் உயிரிழப்பு!

இதையும் படிங்க:காதலியை பெண் கேட்கச் சென்ற காதலன் மனமுடைந்து தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.