ETV Bharat / state

சென்னிமலை குறித்த சர்ச்சை பேச்சு - கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகி கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 7:47 AM IST

Chennimalai Controversial talk issue: சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chennimalai Controversial talk issue
சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சு: கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது!

ஈரோடு: சென்னிமலை அருகே பசுவபட்டி பிரிவைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ஜெபம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது மகன் கோகுல் ஆகியோர், எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சென்னிமலை போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சென்னிமலை பேருந்து நிலையம் முன்பாக கிறிஸ்துவ முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, முருக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்துவ அமைப்பினரை கைது செய்யக் கோரி, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் ஆயிரக்கணக்கானோர் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் நிர்வாகிகளான சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீது, கொலை மிரட்டல் மற்றும் மத கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகளை சென்னிமலை காவல் நிலைய போலீசார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்த கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் சரவணனை கைது செய்தனர். மேலும், அவரை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சென்னிமலை காவல்நிலைய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். தற்போதுவரை தலைமறைவாக உள்ள பாதிரியார் ஸ்டீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிக்கிய நிறுவனம்..! வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.