ETV Bharat / state

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Oct 19, 2019, 11:41 AM IST

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 3 அடி நீர்மட்டம் உயர்ந்து 102 அடியாக எட்டும்போது வெள்ளநீர் வெளியேற்றப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Bhawanisagar Dam 99 feet high, பவானிசாகர் அணை 99அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. தெங்குமரஹாடா மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் முக்கிய நீர்வரத்தாக உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே அணையில் இருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டது. தெங்குமரஹாடா பகுதியில் பெய்யும் மழைநீரும், பில்லூர் அணையின் உபரி நீரும் பவானிசாகர் அணையில் கலப்பதால் அணையின் நீர்வரத்து 99 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 102 அடியை எட்டும்போது வெள்ளநீர் வெளியேற்றப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 99 அடியாக உயர்வு

மேலும், அணையை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, அய்யம்பாளையம், சுஜ்ஜல்குட்டை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர் வரத்து அதிகமாகி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: காவிரி ஆற்றில் 20,500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு!

Intro:Body:tn_erd_01_sathy_bhavanisagar_dam_vis_tn10009

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர்அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்வு

3 அடி நீர்மட்டம் உயர்ந்து 102 அடியாக எட்டும் போது வெள்ளநீர் வெளியேற்றப்படும்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானிஆற்றில் திறந்துவிடப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்னும் 3 அடி உயர்ந்து 102 அடியாக எட்டும்போது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. தெங்குமரஹாடா மாயாறும் மேட்டுப்பாளையம் பவானிஆறும் முக்கிய நீர்வரத்தாக உள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணை முழுகொள்ளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே அணையில் இருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டது. தெங்குமரஹாடா பகுதியில் பெய்யும் மழைநீரும் பில்லூர் அணையின் உபரி நீரும் பவானிசாகர் அணையில் கலப்பதால் அணையின் நீர்வரத்து
அதிகபட்சமாக 22 ஆயிரத்து 333 கனஅடியாகவும குறைந்தபட்சமாக 11 ஆயிரம் கனஅடியாக வந்தது. அணையின் நீர்மட்டம் 99 அடியாகவும் நீர் வெளியேற்றம் பாசனத்துக்கு 1500 கனஅடியாகவும் நீர் இருப்பு 28 டிஎம்சியாக உள்ளது. பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்புக்கு வந்து சேருவதால் அணையை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, அய்யம்பாளையம், சுஜ்ஜல்குட்டை ஆகிய கிராமமக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர் வரத்து அதிகமாகி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரமாக நீடித்தால் அணை, ஓரிரு நாளில் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை 7 மணி நிலவரம்: அணைநீர்மட்டம் 99 அடி, நீர்வரத்து 14600 கனஅடி, நீர் இருப்பு 28 டிஎம்சி, நீர் வெளியேற்றம்:1500 கனஅடி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.