திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் கண்ணைக் கவரும் வகையில் பளிச்சிடும் எல்இடி தெருவிளக்குகள் 11 கோடி ரூபாய் செலவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது நகரின் நுழைவு வாயிலான வெள்ளி அருவி முதல் 24 வார்டுகளின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. இந்த தெருவிளக்குகளுக்காக தனித்துவமான மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. தற்பொழுது இவை அனைத்தும் தொழில்நுட்பக் கோளாறு, மின்கசிவு காரணங்களால் பல இடங்களில் காட்சிப்பொருளாகவே காணப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக செயல்பாட்டில் இல்லாததால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்துவருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக இந்த மின் விளக்குகளை முறையாக பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிக்க: கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!