ETV Bharat / state

வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை - ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு!

author img

By

Published : Jan 21, 2020, 10:52 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு, ராணுவ வீரரான அவர் கணவர்தான் காரணம் என பெண் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

in-dindigul-woman-suicides-on-dowry-issue-case-allegedly-suspicion-turns-to-her-husband-army-officer
வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணப்பட்டியைச் சேர்ந்த பிரம்மசாமி - ஈஸ்வரி தம்பதியின் மகள் முத்துலட்சுமி என்பவருக்கும், ராணுவத்தில் பணிபுரியும் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது முத்துலட்சுமிக்கு அவர்களது பெற்றோர் வரதட்சணையாக 15 பவுன் நகை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் ஐந்து பவுன் நகை கொடுப்பதாக திருமணத்திற்கு முன் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

லட்சுமணன் திருமணமான மூன்று மாதத்தில், மனைவி முத்துலட்சுமியை காஷ்மீருக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் அவர் மட்டும் தனியாக காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு பத்து தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த லட்சுமணன், பண்டிகை முடிந்த பின்பும் தனது மனைவியை தன்னுடன் அழைத்து செல்லவில்லை. இதற்கு முத்துலட்சுமியின் மாமியார் தனலட்சுமி, லட்சுமணன் அக்கா சத்தியா மற்றொரு அக்கா பசுபதி பிரியா ஆகியோர் தடையாக இருந்ததாக முத்துலட்சுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது பொங்கலுக்கு வருவதாக உறுதியளித்த லட்சுமணன் வரவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் காஷ்மீரிலிருந்து லட்சுமணன் தனது மனைவி முத்துலட்சுமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், முத்துலட்சுமி தரவேண்டிய அந்த ஐந்து பவுன் நகையுடன் ரூ. 2 லட்சம் பணம் கொண்டு வந்தால்தான் அவரை காஷ்மீர் அழைத்துச் செல்வதாக லட்சுமணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தனது பெற்றோரின் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் இதுகுறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியின் உடலை உடற்கூறாய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து முத்துலட்சுமியின் பெற்றோர், உறவினர்கள் தங்களது மகளின் இறப்பிற்கு காரணமான மருமகன் லட்சுமணன் காஷ்மீரிலிருந்து வந்தால்தான் உடலை வாங்குவதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அரசு அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்வதாக உறுதியளித்த பின் முத்துலட்சுமியின் உறவினர்கள், அவரின் உடலை வாங்கி சென்றனர்.

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை உறவினர்கள் மருத்துவனையில் முற்றுகைப் போராட்டம்

இதையும் படியுங்க: 'தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன்' - மனம் திறந்த பிரவீன் குமார்

Intro:திண்டுக்கல் 21.01.2020
ஒட்டன்சத்திரம் அருகே பண்ணபட்டியைச் சேர்ந்த திருமணமான 8 மாத இளம் பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை ராணுவத்தில் பணிபுரியும் கணவனே காரணம் என மாமனார் மாமியார் புகார் பிரேதத்தை வாங்க மறுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முற்றுகை
Body:திண்டுக்கல் 21.01.2020
எம்.பூபதி செய்தியாளர்.

ஒட்டன்சத்திரம் அருகே பண்ணபட்டியைச் சேர்ந்த திருமணமான 8 மாத இளம் பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை ராணுவத்தில் பணிபுரியும் கணவனே காரணம் என மாமனார் மாமியார் புகார் பிரேதத்தை வாங்க மறுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்த பிரம்மசாமி ஈஸ்வரி இவர்களது மகள் முத்துலட்சுமி என்பவரை அதே ஊரான லட்சுமணன் என்பவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அப்பகுதியில் திருமணம் நடைபெற்றது. லட்சுமணன் ராணுவத்தில் காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணத்தின் போது முத்துலட்சுமிக்கு அவர்களது பெற்றோர் வரதட்சணையாக 15 பவுன் நகை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பேச்சு பிரகாரம் மீதமுள்ள ஐந்து பவுன் நகை போடுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் லட்சுமணன் திருமணமான 3 மாதத்தில் தனது மனைவியான முத்துலட்சுமியை காஷ்மீருக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் ஒரு மாதம் திருமணம் முடித்து தங்களது சொந்த ஊரில் இருந்த நிலையில் காஷ்மீருக்கு சென்றுவிட்டார். அதன்பின் வரவில்லை தீபாவளிக்கு 10 தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார் அப்போது தனது மனைவியை அழைத்துச் செல்லவில்லை. முத்துலட்சுமியை அழைத்துச் செல்ல அவரது மாமியார் தனலட்சுமி அக்கா சத்தியா மற்றொரு அக்கா பசுபதி பிரியா ஆகியோர் அதற்கு தடையாக இருந்ததாக முத்துலட்சுமியின் பெற்றோர் தற்போது கூறுகின்றனர். அதன்பின் லட்சுமணன் தீபாவளிக்கு முன்பே காஷ்மீர் கிளம்பி சென்றுவிட்டார் தனது மனைவியை அழைத்துச் செல்லவில்லை. தற்போது பொங்கலுக்கு வருவதாக உறுதியளித்துள்ளார் ஆனால் பொங்கலுக்கும் வரவில்லை இந்நிலையில் நேற்று மதியம் காஷ்மீரிலிருந்து லட்சுமணன் தனது மனைவி முத்துலட்சுமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது நீ எப்போது ஐந்து பவுன் நகை கொண்டு வருகிறாரோ அதோடு சேர்த்து ரூ 2 லட்சம் பணமும் கொண்டு வந்தால்தான் உன்னை காஷ்மீர் அழைத்துச் செல்வேன் இல்லையென்றால் உன்னை அழைத்துச் செல்ல மாட்டேன் உன்னால் பணமும் நகையும் உங்க பெற்றோர் தரவில்லை என்றால் நீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் நான் உன்னை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த முத்துலட்சுமி தனது பெற்றோரின் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எனது மகளின் இறப்பிற்கு காரணமான மருமகன் லட்சுமணன் காஷ்மீரிலிருந்து வந்தால் தான் நாங்கள் உடலை வாங்குவோம் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்தால்தான் பிரேதத்தை பெற்றுச் செல்வோம் இல்லையென்றால் பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று கூறி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அனைவரும் காவல்துறை அதிகாரி மற்றும் சார் ஆட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரசு அலுவலர்கள் காவல் துறையினர் உறவினர்களிடமும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என்றும் அதனால் நீங்கள் தயவு செய்து உடலை பெற்றுச் செல்லுங்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் அனைவரும் கூட்டமாக அமர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.Conclusion:திண்டுக்கல் 21.01.2020
ஒட்டன்சத்திரம் அருகே பண்ணபட்டியைச் சேர்ந்த திருமணமான 8 மாத இளம் பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை ராணுவத்தில் பணிபுரியும் கணவனே காரணம் என மாமனார் மாமியார் புகார் பிரேதத்தை வாங்க மறுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முற்றுகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.