ETV Bharat / state

கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டுத் தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்

author img

By

Published : Mar 12, 2020, 10:16 PM IST

Updated : Mar 12, 2020, 11:43 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பச்சைமரத்து ஓடை, சின்னப்பள்ளம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டு தீ
கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பச்சைமரத்து ஓடை, சின்னப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இருப்பினும் பல ஏக்கரில் அங்கிருந்த மரங்கள் தீயில் ஏரிந்து சாம்பலாகின.

தற்போது கோடை காலம் என்பதால் தீ விபத்து அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆகவே கொடைக்கானல் பகுதிகளில் சிறிய ரக தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டு தீ

இதையும் படிங்க: குன்னூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறை!

Last Updated : Mar 12, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.