ETV Bharat / state

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து தம்பதிக்கு அரிவாள் வெட்டு

author img

By

Published : Aug 14, 2022, 9:42 PM IST

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து தம்பதியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா வெள்ளையகவுண்டனூர் அருகே பச்சலாகவுண்டனூரை சேர்ந்த ராஜேந்திரன்-ராணி தம்பதியினரின் மகள் உமா. இவரின் கணவர் உயிரிழந்த நிலையில், இரண்டு மகன்களுடன் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு நூற்பாளையில் வேலைக்கு சென்றபோது தங்கச்சி அம்மாபட்டியைச் சேர்ந்த காளிமுத்து (30) என்பவருடன் திருமணத்தை மீறியத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையறிந்த உமாவின் பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், அவர் காளிமுத்துவுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காளிமுத்து இன்று (ஆக.14) காலை உமாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், காளிமுத்துவை குண்டுக்கட்டாகப் பிடித்து கையில் இருந்த அரிவாளைப் பறிமுதல் செய்ததோடு அவருக்கு தர்ம அடியும் கொடுத்தனர்.

அத்துடன் கயிறு ஒன்றினால் கட்டி வைத்து இது குறித்து போலீசாருக்கு தகவலளித்தனர். இதில் படுகாயம்டைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு வீடு புகுந்து கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களையும் போலீசாரையும் பரபரப்படைய செய்தது.

இதையும் படிங்க: அண்ணாமலை புகைப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.