ETV Bharat / state

மகன்களுடன் தீக்குளிக்க பெண் முயற்சி!

author img

By

Published : Nov 5, 2019, 8:51 AM IST

தருமபுரி: இறந்த கணவருக்கு சேரவேண்டிய சொத்தை கணவரின் சகோதர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் எனக்கூறி பெண் ஒருவர் தனது இரு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

women suicide attempt with her two sons

தருமபுரி அடுத்த அன்னசாகரகத்தைச் சேர்ந்தவர் முருகன். பூக்கடை நடத்திவந்த இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய மனைவி கவிதா மற்றும் மகன்களான கவுதம், தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் அன்னசாகரகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

முருகன் இறந்த பிறகு முருகனுக்குச் சேரவேண்டிய சொத்தை தங்களுக்குப் பிரித்துத் தருமாறு முருகனின் சகோதரர்களிடம் அவரது மனைவி மற்றும் மகன்கள் கேட்டுள்ளனர். ஆனால் சொத்தெல்லாம் தரமுடியாது அதற்கு பதிலாக 13 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் என்று முருகனின் சகோதரர்கள் சமரசம் பேசியுள்ளனர்.

ஆனால், பேசியபடி கவிதாவிற்குப் பணம் கொடுக்காமல் முருகனின் சகோதரர்கள் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து கவிதா பலமுறை காவல்துறையிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கவிதாவும் அவரது மகன்களும் தங்களுக்கு வரவேண்டிய சொத்தை பிரித்துத் தராமல் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.

பெண் தனது இரு மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி

அப்போது, அவர்கள் திடீரென பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைக்கண்ட காவலர்கள், அவர்களைத் தடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்தவர்கள் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ‘திருவள்ளுவர் இந்து என்பதற்கு வரலாற்றில் ஆதாரமில்லை!’ - அமைச்சர் கே. பாண்டியராஜன்

Intro:tn_dpi_01_suside_attempt_collector_office_vis_7204444Body:tn_dpi_01_suside_attempt_collector_office_vis_7204444Conclusion:tn_dpi_01_suside_attempt_collector_office_vis_7204444 அன்னசாகரம் கிராமத்தில் பல லட்சம் மதிப்பிலான சொத்துகளை பிரித்து தராமல் ஏமாற்றுவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.


தருமபுரி அடுத்த அன்னசாகரகத்தை சேர்ந்த முருகன் என்பவர் பூக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி கவிதா, மகன்கள் கவுதம், தமிழச்செல்வம் அன்னசாகரகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் முருகன் மற்றும் சகோதரர்கள் மாதேஷ், திருப்பதி ஆகிய மூவருக்கும் சொந்தமான வீடு, நிலம், 3 பூகடைகள் உள்ளது. முருகன் இறந்த பிறகு, தங்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்குமாறு, முருகன் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பூகடை தரமுடியாது, அதற்கு பதிலாக பணம் ரூ. 13 இலட்சம் கொடுப்பதாக சமரசம் செய்துள்ளனர். ஆனால் பேசிய படி பணம் தரவில்லை, வீடு மற்றும் நிலத்தையும் பிரித்து தரவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறையினரிடமும் பலமுறை புகார் செய்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மூன்றாண்டுகளாக சொத்தையும் தரவில்லை, பேசிய பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் மனைவி கவிதா, மகன்கள் கவுதம், தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தங்களுக்கு கொடுக்க வேண்டிய பல இலட்சம் மதிப்புள்ள சொத்துக்களை, பிரித்து தராமல் ஏமாற்றுபவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டு தர வேண்டும் என மனு கொடுக்க வந்தனர். அப்போது பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து, மூவரும் உடலின் மீது ஊற்றி கொண்டு, தீக்குள்ளிக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட, காவல் துறையினர் அவர்களை தடுத்து, காப்பாற்றி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மூன்று தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.