ETV Bharat / state

பென்னாகரத்தில் கரோனாவால் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 20, 2020, 3:56 PM IST

தருமபுரி: பென்னாகரம் பகுதியில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.

two persons died in pennagaram due to corona
two persons died in pennagaram due to corona

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிமாவட்டத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து இவருக்கும், இவரோடு தொடர்பில் இருந்த அவரது தந்தைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இருவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கரோனா தொற்று ஏற்பட்டு, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். கடந்த மூன்று தினங்களில் மட்டும் பென்னாகரம் பகுதியில் 109 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக நகரப் பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு முக்கியச் சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.