தருமபுரி நரசிம்மாச்சாரி தெருவில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா அருகே கழிவு நீர் கால்வாயை பெண் தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்துள்ளார். அப்போது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை மிதந்து கிடந்தைப் பார்த்த அப்பெண் குழந்தை எடுத்துள்ளார்.
இதையடுத்து நகராட்சி உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி நகர காவல் துறையினர், பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்பு