ETV Bharat / state

பச்சிளம் குழந்தையை கழிவு நீரில் வீசிய கொடூரம்

author img

By

Published : May 6, 2020, 12:59 PM IST

தருமபுரி: பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கழிவு நீர் கால்வாயில் வீசிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீரில் வீசப்பட்ட பச்சிள குழந்தை
கழிவுநீரில் வீசப்பட்ட பச்சிள குழந்தை

தருமபுரி நரசிம்மாச்சாரி தெருவில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா அருகே கழிவு நீர் கால்வாயை பெண் தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்துள்ளார். அப்போது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை மிதந்து கிடந்தைப் பார்த்த அப்பெண் குழந்தை எடுத்துள்ளார்.

இதையடுத்து நகராட்சி உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி நகர காவல் துறையினர், பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கழிவுநீரில் வீசப்பட்ட பச்சிள குழந்தை
பின்னர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்து குழந்தையை யார் வீசிச் சென்றது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.