ETV Bharat / state

நிலத்தகராறில் உறவினர் வெறிச்செயல்: தருமபுரியில் தாய், மகன் கொலை!

author img

By

Published : Jan 3, 2023, 7:16 PM IST

தருமபுரி அருகே நிலத்திற்காக ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் தாக்கியதில் தாய் மற்றும் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நிலத்தகராறில் உறவினர் வெறிச்செயல்: தருமபுரியில் நடந்த சோகம்!
நிலத்தகராறில் உறவினர் வெறிச்செயல்: தருமபுரியில் நடந்த சோகம்!

தருமபுரி: கிருஷ்ணாபுரம் அடுத்த ஒன்னியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், சின்னசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (67). இவர்களுக்கு ராஜமாணிக்கம் (50) என்ற மகனும் நீலா, வசந்தா, பேபி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். தற்போது 3 மகள்களுக்கும் திருமணமான நிலையில், ராஜமாணிக்கத்திற்கும் அவரது உறவினர் பெரியசாமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இதில் நாளை வயலில் நெல் அறுவடை செய்ய வேண்டி, நெல் அறுக்கும் வாகனம் சென்று வருவதற்கு ஏதுவாக, பழனியம்மாள் மற்றும் அவரது மகன் ராஜமாணிக்கம் இருவரும் வயலில் நெல் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் கீரையை அறுத்துக் கொண்டிருந்த பெரியசாமி, அவர்களிடம் வந்து தகராறில் ஈடுபட்டதில், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால், பழனியம்மாள் மற்றும் ராஜமாணிக்கத்தை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணாபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெரியசாமியைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு நாடகமாடிய கராத்தே மாஸ்டர்.. அம்பலமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.