ETV Bharat / state

'இலவச மின்சார விவகாரத்தில் அரசு இரட்டை நிலைபாட்டில் உள்ளது' - செந்தில்குமார் எம்.பி.,

author img

By

Published : May 27, 2020, 4:08 PM IST

தருமபுரி: விவசாயிகளின் இலவச மின்சார விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை நிலைபாட்டில் உள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

senthil-kumar-mp
senthil-kumar-mp

தருமபுரி மாவட்டம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டுமான பணியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி 2019-20 நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முதல் பணியாக 3500 மாணவியர் படித்து வரும் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிட கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தாண்டு தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 பள்ளிகளில் நவீன கழிப்பிடங்கள், 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு இலவச நாப்கின்கள் வழங்க தன்னார்வலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் இலவச மின்சார விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது.

முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். ஆனால் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறன்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது' - ஜோதிமணி எம்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.