ETV Bharat / state

தருமபுரியில் மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் பட்டதாரி இளைஞர்கள்!

author img

By

Published : Jan 13, 2020, 9:04 PM IST

தருமபுரி: அழிந்து வரும் மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக பட்டதாரி இளைஞர்கள் மண்பாண்டத் தொழிலாளர்களிடம் மண்பாண்டங்களைப் பெற்று வண்ணங்கள் பூசி விற்பனை செய்து வருகின்றனர்.

தருமபுரி மண்பாண்டத் தொழில்  பொங்கல் மண்பாண்டம்  pongal pot bussines  dharmapuri pongal pot bussines doing youths
தருமபுரியில் மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் பட்டதாரி இளைஞர்கள்

தருமபுரி மாவட்டத்தில், தண்டுகாரம்பட்டி, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 1,500 குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். தற்போது, மண்பானையில் பொங்கல் வைப்பது குறைந்து வருகிறது.

அதனால், மண்பாண்டம் செய்பவர்கள் பலரும் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக தருமபுரி தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் புதிய முயற்சியாக மண்பாண்டத் தொழிலாளர்களிடம் மண்பாண்டங்களை விலைக்கு வாங்கி அந்த மண்பாண்டங்களில் கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பூசி விற்பனைக்கு வைத்துள்ளனர்.

தருமபுரியில் மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் பட்டதாரி இளைஞர்கள்

தருமபுரியின் முக்கிய சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதில், 40 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ள பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல்

Intro:தருமபுரியில், அழிந்து வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழிலை மீட்டெடுத்து பொங்கல் பானைகளை வண்ணம் பூசி விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர்கள் .Body:தருமபுரியில், அழிந்து வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழிலை மீட்டெடுத்து பொங்கல் பானைகளை வண்ணம் பூசி விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர்கள் .Conclusion:தர்மபுரியில், அழிந்து வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழிலை மீட்டெடுத்து பொங்கல் பானைகளை வண்ணம் பூசி விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர்கள் .
பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய திருநாள், பொங்கல் திருநாளில் கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் புது பானையில் பொங்கல் வைப்பது தனி சிறப்பு. தர்மபுரி மாவட்டத்தில், தண்டுகாரம்பட்டி, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலை பாரம்பரியாமாக செய்துவருகின்றனர்.மண் பானையில் பொங்கல் வைப்பது தற்போது குறைந்து வருகிறது.அதன்காரணமாக மண்பாண்ட தொழிலில் அழிந்து வருகிறது.
இந்நிலையில் அழிந்து வரும் தமிழக பாரம்பரியமாக இருந்த மண்பாண்ட தொழிலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக தர்மபுரி தண்டுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் புதிய முயற்சியாக மண்பாண்ட தொழிளார்களிடம் மண்பாண்டங்களை விலைக்கு வாங்கி அந்த மண்பாண்டங்களில் அழகிய கண்ணை கவரும் பல வண்ணங்களை பூசி வண்ணமயகமாக்கி விற்பனைக்கு வைத்துள்ளனர்.
தர்மபுரி நகரின் முக்கிய சாலையோரங்களில் தங்கள் கை வண்ணத்தால் வரையப்பட்ட பானைகளை அடுக்கி வைத்து விற்பனைக்கு வைத்துள்ளதை ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் .
சாதாரண பானையை விட 25% சதவீதம் மட்டுமே கூடுதலாக விற்பனை செய்வதாகவும். 40ரூபாய் பானை 30ரூபாய்க்கும்,90 ரூபாய் பானை 110 ரூபாய்க்கும், 170ரூபாய் பானை 250 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். இவா்கள் வண்ணம் தீட்டிய பானைகள் 40 ரூபாய் முதல் 540 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனா்.வண்ண வண்ண பானைகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.