ETV Bharat / state

தருமபுரியில் ஏறுமுகத்தில் கரோனா பாதிப்பு!

author img

By

Published : May 9, 2020, 12:15 AM IST

தருமபுரி: தென்கரைக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து மாவட்டத்தில் நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

தருமபுரியில் ஏறுமுகத்தில் கரோனா பாதிப்பு
தருமபுரியில் ஏறுமுகத்தில் கரோனா பாதிப்பு

தருமபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டை காந்திநகரை சேர்ந்த இரண்டு நபர்கள் சென்னை கோயம்பேடு சந்தையில் கூழ் விற்பனை, கருவேப்பிலை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவியதையடுத்து காய்கனி சந்தை மூடப்பட்டதால் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

தென்கரைக்கோட்டை திரும்பியவா்களுக்கு சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை செய்தனா். பரிசோதனை முடிவில் நோய்த் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டதில் ஏற்கனவே கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் . தற்போது பாலக்கோடு பகுதியை சோ்ந்த ஒருவர், தென்கரைக்கோட்டை பகுதியை சோ்ந்த இருவர் என மூன்று போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.