ETV Bharat / state

வெங்காய லாரியில் மதுபானம் கடத்தல் : மூன்று பேர் கைது!

author img

By

Published : May 28, 2021, 9:38 AM IST

கடலூர்: கர்நாடகாவிலிருந்து வெங்காய லாரியில் மதுபானங்கள் கடத்தி வந்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

வெங்காய லாரியில் மதுபானங்கள் கடத்தல்: மூவர் கைது!
வெங்காய லாரியில் மதுபானங்கள் கடத்தல்: மூவர் கைது!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர், வேப்பூர் நெடுஞ்சாலைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திலிருந்து கும்பகோணத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவரிடம் விசாரித்தபோது, அவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன், துரை, உதயகுமார் என்பது தெரியவந்தது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் கிடைக்காததால், கர்நாடகாவிலிருந்து மதுபானங்களை வாங்கி செல்வதை ஒப்புக்கொண்டனர். கடந்த ஒருவாரமாக இதுபோல எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

வெங்காய லாரியில் மதுபானங்கள் கடத்தல்: மூவர் கைது!
வெங்காய லாரியில் மதுபானங்கள் கடத்தல்

இதனையடுத்து இவர்கள் கொண்டு சென்ற 500 மதுபாட்டில்கள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.