ETV Bharat / state

என்எல்சி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!

author img

By

Published : Jul 2, 2020, 8:39 PM IST

கடலூர்: நெய்வேலி என்எல்சி தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

nlc
nlc

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் 2ஆவது அனல் மின் நிலையத்தில் ஏழு அலகுகள் உள்ளன. இங்கு ஆயிரத்து 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அனல் மின்நிலையத்தில் 5ஆவது அலகில் பாய்லர் பிரிவில் 30 மீட்டர் உயரத்தில் நீராவிக்குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். என்எல்சி அனல் மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக என்எல்சி நெய்வேலி இல்லத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்கள் என்எல்சி மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என்எல்சி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவது என உறுதியளித்தது. இதனை ஏற்காத தொழிற்சங்கங்களும், உறவினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதபோன்று இன்று (ஜூலை 2) மீண்டும் நெய்வேலி இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என என்எல்சி நிர்வாக இயக்குநர் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுழலாத ராட்டினத்தால் சுருண்ட ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.