ETV Bharat / state

அதிக கட்டணம் வசூல்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

author img

By

Published : Jan 23, 2021, 12:06 PM IST

கடலூர்: அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

chidambaram
chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து 46 நாட்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், நேற்று ( ஜனவரி 22) மருத்துவக் கல்லூரியை காலவரையறின்றி மூடுவதாகவும், விடுதியை மாணவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜனவரி 21) மாலையில் இருந்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் உணவு இல்லை, நிர்வாகம் அறிவித்த காரணத்தினால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் மாணவ மாணவிகள் உணவில்லை என்ற கோஷத்தை எழுப்பி தட்டுகளை கையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில், 1,300 அரசு இராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர், அடிப்படை உரிமைகளை பறித்து பட்டினி போடுவதாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மீது புகார் அளித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.