ETV Bharat / state

கடலூர் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 5, 2022, 2:45 PM IST

Updated : Jun 5, 2022, 3:29 PM IST

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆறு தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 பேர் உயிரிழப்பு
7 பேர் உயிரிழப்பு

கடலூர்: ஏ.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் 6 சிறுமிகள் அப்பகுதியில் பாய்ந்தோடும் கெடிலம் ஆறு தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தடுப்பணையின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 7 பேரின் உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7 பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவர்கள் சுமுதா (16), நவநீதா (19), பிரியா (17), மோனிகா (15), சங்கீதா (17), பிரியதர்ஷினி (14), காவியா (12) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் கார் ஓட்டுநர் படுகொலை; கேரளாவில் பதுங்கிய 7ஆவது குற்றவாளி கைது!

Last Updated : Jun 5, 2022, 3:29 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.