ETV Bharat / state

சான்றிதழ்கள் தராமல் இழுத்தடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்: சிக்கலில் ஒரு லட்சம் பட்டதாரிகள்

author img

By

Published : Apr 16, 2022, 8:32 PM IST

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தாமதமாகி உள்ளதால், 1 லட்சம் பட்டதாரிகள் மேற்படிப்பு, பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

சான்றிதழ்கள் தராமல் இலுத்தடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம் : சிக்கலில் ஒரு லட்சப் பட்டதாரிகள்
சான்றிதழ்கள் தராமல் இலுத்தடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம் : சிக்கலில் ஒரு லட்சப் பட்டதாரிகள்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின்கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என 133 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக பட்ட சான்றிதழ்கள் வரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

சான்றிதழ் வழங்காததால் சிரமத்தில் மாணவர்கள்: 2019 மற்றும் 2020இல் படிப்பை முடித்த தரப்பினருக்கு, இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் சுமார் ஒரு லட்சம் பட்டதாரிகள் மேற்படிப்புகளில் சேரவும், பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்கு செல்ல முடியாமலும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் கூறுகையில், “பட்டமளிப்பு விழா நடத்திய பின் சான்றிதழ் வழங்கப்படும் என பல்கலைக்கழகத்தின் தரப்பில் கூறுகின்றனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் மேல் படிப்பிற்குச் செல்ல முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளோம். ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சான்றிதழ்கள் வழங்கமுடியும் என பல்கலைக்கழகம் சார்பில் கூறுகின்றனர்.

முந்தைய ஆளுநரும் சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது உள்ள ஆளுநரும் சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருகிறார். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. குறைந்தபட்சம், 'ஆன்லைன்' வழியிலாவது உடனடியாக பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்தி, சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது

சான்றிதழ்கள் தராமல் இழுத்தடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் வேண்டும்: தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை இதை சிறப்பு கவனத்திலெடுத்து சான்றிதழ் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்த வேண்டும். முன்னதாக, சான்றிதழ் வழங்கக்கோரி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு மெயில் அனுப்பிய நிலையிலும் தங்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை’ எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜிடம் கேட்டபோது, ”கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் நேரில் ஒப்புதல் அளித்த பிறகே மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முடியும்’’ எனவும் கூறிய அவர், ’’மே மாதத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்” எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: தேநீர் விருந்து புறக்கணிப்பு ஆளுநரின் மனதைத் தொடும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.