ETV Bharat / state

கத்திரிக்கோலால் தந்தையைக் கொலை செய்த மகன்!

author img

By

Published : Aug 13, 2021, 10:17 AM IST

குடிபோதையில் தந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

தந்தை
தந்தை

கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60), காந்தி பார்க் பகுதியில் வாழை மண்டி நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இவரது வாழை மண்டியை இவரது மகன் கோவிந்தராஜ் கவனித்து வருகிறார்.

கடந்த மூன்று நாள்களாக அளவிற்கு அதிகமாக கோவிந்தராஜ் குடித்து விட்டு வீட்டிற்குச் சென்று ரகளை செய்து வந்துள்ளார். மேலும், புது வீடு கட்ட பணம் கேட்டும் கோவிந்தராஜ் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ராமச்சந்திரன், தனது மகனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிபோதையிலிருந்த கோவிந்தராஜ், ஆத்திரத்தில் கத்திரிக்கோலை எடுத்து ராமச்சந்திரன் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ராமச்சந்திரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி குடோனில் 550 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.