ETV Bharat / state

திருச்சி குடோனில் 550 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

author img

By

Published : Aug 13, 2021, 8:25 AM IST

திருச்சி: குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்காவை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி
திருச்சி

திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள குடோனில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் துறையினர், சம்பந்தப்பட்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

gutka
குட்கா விற்பனை செய்த ராஜேஷ்

அதனைத் தொடர்ந்து, மொத்தமாக 550 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜேஷ் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 150க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.