ETV Bharat / state

கோவை மாநகராட்சி ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவியேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 1:49 PM IST

Kovai Corporation commissioner: கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவியேற்றுள்ளார்.

kovai Corporation commissioner
கோவை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவியேற்பு

கோவை மாநகராட்சி ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவியேற்பு!

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் இணை மேலாண் இயக்குனராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சியின் 29வது ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் இன்று (அக்.19) பதவியேற்றுக் கொண்டார். புதிய கமிஷனராக பதவியேற்ற சிவகுரு பிரபாகரனுக்கு ஊழியர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், புதிதாக பதவி ஏற்கும் மாநகராட்சி ஆணையாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, "நான் 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ். சென்னை மாநகராட்சியில் 2 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். அங்கு பாதாளச் சாக்கடை, சாலைகள், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு உள்ளேன்.

மூன்று வருடங்களாக சிவில் இன்ஜினியராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மேலும், வட சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். முதலமைச்சர், அமைச்சர்கள், செயலாளர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படி பணிகளைத் திறம்பட செய்வது என கற்றுக்கொண்டேன்.

கோவை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக புரிந்து கொண்டு, திட்டங்கள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தன்னார்வலர்கள் நல்ல பணிக்கு பயன்படுத்தப்படுவர். சென்னையில் இருந்ததால் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பணிகளில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. அனைத்தையும் சரியாக கையாளுவேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “அலையாத்தி காடுகளை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது” - அமைச்சர் மெய்யநாதன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.