ETV Bharat / state

கோவையில் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Nov 15, 2019, 9:19 PM IST

கோவை: மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனிலிருந்து ரூ. 75 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ரூ. 75 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற மினி வேனை சோதனை செய்யும் போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தில் வந்த ஷேஸ்தாராம்(50), மோதிலால்(38) ஆகியோரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரித்தனர். அவர்கள் கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனிலிருந்து குட்காப் பொருட்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சரவணம்பட்டி காவல் துறையினர், மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் தீவிர சோதனை நடத்தினர். அங்கு சுமார் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள புகையில் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

ரூ. 75 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பின்னர் காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜனின் வீடு அருகில் வாடகைக்கு குடோன் எடுத்து, கடந்த 5 மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் எனக்கூறி, குட்கா பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. தற்போது, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் 30 ஆண்டு பழமையான சிலை திருட்டு- போலீசார் விசாரணை

Intro:கோவை அருகே கண்டுபிடிக்கப்பட்ட குட்கா குடோனில் இருந்து 75 இலட்ச ரூபாய் மதிப்பிலான தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்Body:கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் நேற்று இரவு, தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதில் வந்த ஷேஸ்தாராம்(50), மோதிலால்(38) ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் இருந்து குட்கா பொருட்களை எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து சரவணம்பட்டி போலீஸார், மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் தற்போது சோதனை நடத்தினர். அதில் சுமார் 75 இலட்ச ரூபாய் மதிப்பிலான தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மோப்பிரிபாளையம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவரது வீட்டை ஒட்டி வாடகைக்கு குடோன் எடுத்து, கடந்த 5 மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் எனக்கூறி குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் வடமாநிலங்களில் இருந்து குட்கா பொருட்களை கொண்டு வந்து இக்குடோனில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை.நடத்தி வருகின்றனர்Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.