ETV Bharat / state

‘ரஜினி நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார்’ - தமிழருவி மணியன் ஆருடம்!

author img

By

Published : Dec 17, 2019, 5:12 AM IST

கோவை: ரஜினிகாந்த் வருகிற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று காந்தி மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

tamilaruvi manian
காந்தி மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தமிழிசைச் சங்கம் சார்பில் "மறக்கக்கூடாது மனிதர்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழருவி மணியன், ‘நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற ஊடகங்கள் கேள்வி கேட்பது எதற்கு என புரியவில்லை. அதற்காக பட்டிமன்றமும் நடத்த வேண்டாம்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்

இன்று தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் வாக்குச்சாவடிகளில் பிரதிநிதிகளை வைத்திருப்பது அதிமுகவும் திமுகவும்தான். வேறு எந்தக் கட்சிக்கும் வாக்குச்சாவடிகளில் 10 பேர் கூட பிரதிநிதிகளாக இல்லை. ஆனால், ஓசையில்லாமல் அனைத்து கட்டுமானத்தையும் ரஜினிகாந்த் செய்து முடித்து வைத்துள்ளார். அவரது கட்சியின் பெயர், கொள்கை, மாநாடு எப்போது, மக்களை எப்போது சந்திப்பது உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே திட்டமிட்டு வைத்துள்ளார். வருகிற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிப்பார்’ என்றார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை.க்கு சீர்மிகு அந்தஸ்து: மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திய மத்திய அரசின் கடிதம்!

Intro:tamilaruvi maniBody:tamilaruvi manianConclusion:பொள்ளாச்சியில் தமிழ் இசை சங்கம் சார்பில் நடந்த சொற்பொழிவு கூட்டத்திற்கு பின் காந்தி மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கூறியதுநடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியல் வருவது உறுதி என தெரிவித்தார் பொள்ளாச்சி – 16பொள்ளாச்சியில் தமிழிசைச் சங்கம் சார்பில் மறக்கக்கூடாது மனிதர்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின் சொற்பொழிவில் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் போல் ஆட்சி செய்ய யாரும் இல்லை எனவும் அவர் ஆட்சிக்கு வரும் பொழுது அரசு கஜானாவில் 47 ஆயிரம் கோடி இருந்தது தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை தந்தவர் ஆட்சியை விட்டு போகும்பொழுது அரசு கஜானாவில் 121 கோடி வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது தமிழகத்தில் யாரும் இல்லை எனக் குறிப்பிட்டார் பின் செய்தியாளரிடம் கூறும்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற ஊடகங்கள் கேள்வி கேட்பது தனக்கு புரியவில்லை எனவும் உரத்த குரலில் சொல்லிவிட்டேன் அதற்காக பட்டிமன்றம் நடத்த வேண்டாம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொன்னார் அதுபோல ஒரு கட்சியை உருவாக்கும் பொழுது அடிப்படை கட்டுமானங்களை இரண்டு ஆண்டுகளாக மிகத்தெளிவாக கட்டுமானத்தை உருவாக்கியுள்ளார் இன்று தமிழ்நாடு முழுவதும் பார்த்தால் 234 சட்டமன்ற தொகுதிகள் வாக்குச்சாவடிகளில் பிரதிநிதிகளை வைத்திருப்பது அதிமுகவும் திமுக வந்தான் வேற எந்த கட்சிக்கும் வாக்குச்சாவடிகளில் பத்து பேரு பிரதிநிதிகளாக இல்லாமல் இருக்கிறது ஓசையில்லாமல் அனைத்து கட்டுமானத்தையும் செய்து முடித்து வைத்துள்ளார் அவரது கட்சியின் பெயர் கொள்கை மாநாடு எப்பொழுது என மக்களை சந்திப்பது எனதிட்டமிட்டு வைத்துள்ளார் எனவே நடிகர் ரஜினிகாந்த் முறையாக ஊடகங்கள் முன் தெளிவாக கூறுவார் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறார் வரும் 2021 ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பார் என தெரிவித்தார்.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.