ETV Bharat / state

இரண்டு யானைகளுக்கிடையே மோதல்; ஒரு யானை உயிரிழப்பு!

author img

By

Published : Aug 4, 2022, 10:45 PM IST

கோவை அருகே 2 ஆண் யானைகள் சண்டையிட்டதில் ஒரு ஆண் யானை உயிரிழந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

கோவை ஆனைகட்டி அருகே உள்ள கூட்டு புளிக்காடு என்ற இடத்தில் இன்று மதியம் இரண்டு ஆண் யானைகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொண்டன. இதனை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து கோவை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அதன்பேரில் கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று பார்த்ததில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

மேலும் அதன் உடலில் பத்துக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வனத்துறை உயர் அலுவலர்களுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாலை நேரம் ஆனதால் நாளை யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் எனக் கூறிய வனத்துறையினர், மேலும் இதனுடன் சண்டையிட்ட மற்றொரு ஆண் யானை வனப்பகுதிக்குள் அருகிலேயே இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த யானைக்கு உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை வனத்துறை ஊழியர்கள் நாளை காலை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், நாளை உயர் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் எனவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.