ETV Bharat / state

சென்னை, கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

author img

By

Published : Nov 10, 2022, 6:40 AM IST

Updated : Nov 10, 2022, 9:11 AM IST

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 45 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை
கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர்,ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

உக்கடம் கோட்டை மேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னையிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, ஜமாலியா, பெரம்பூர் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட 45 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: சென்னையில் 18 பேர் என தகவல்

Last Updated : Nov 10, 2022, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.