ETV Bharat / state

கோவை ஜல்லிக்கட்டு - 15 காளைகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு

author img

By

Published : Feb 22, 2021, 6:56 AM IST

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை பிடித்த வாடிபட்டியை சேர்ந்த மாடுபிடிவீரருக்கு கார் முதல் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை ஜல்லிக்கட்டு
கோவை ஜல்லிக்கட்டு

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் நான்காவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து நடத்திய இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 காளைகளும், 750-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் காளைகளும் போட்டியில் பங்கேற்றன.

வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை பிடிக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகளைப் பிடித்த காளையர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயங்கள், பரிசாக வழங்கப்பட்டன.

அதிகபட்சமாக 15 மாடுகளை பிடித்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.

13 காளைகளை பிடித்த கார்த்தி என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

11 காளைகளைப் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த வீரருக்கு மூன்றாவது பரிசாக ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இதேபோல இரண்டாம் இடம் பிடித்த ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரின் காளைக்கு பைக்கும், மூன்றாவது இடம்பிடித்த அலங்காநல்லூர் அன்பு என்பவரது காளைக்கு ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி பரிசுகளை வழங்கினார்.

இப்போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.