ETV Bharat / state

கோவை நாளை (ஜன.18) தொடங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள்.. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 10:40 PM IST

Khelo India 2024: கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

Etv Bharat
Etv Bharat
கோவை நாளை தொடங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள்

கோவை: மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வரும் 19ஆம் முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இப்போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்காகத் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து வுஷு அமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர் சபீர் கூறுகையில், "மத்திய அரசின் கேலோ இந்தியத் திட்டத்தால் விளையாட்டுத் துறையில் பெண்கள் தங்களது திறமைகளைத் தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்ற வருகின்றன. வடக்கு மண்டல அளவிலான போட்டிகள் உத்தரகண்ட் மாநிலத்திலும், கிழக்கு மண்டல அளவிலான போட்டிகள் அசாம் மாநிலத்திலும், மேற்கு மண்டல அளவிலான போட்டிகள் கோவாவிலும் மற்றும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறுகின்றன.

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை "ஆஸ்மிதா" அமைப்புடன் தமிழ்நாடு வுஷு அசோசியேஷன் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகின்றனர். இதில் மொத்தம் 9 மாநிலங்கள் இருந்து சுமார் 600 வீராங்கனைகள் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

மண்டல அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக சாதனைக்கு தயாராகும் ஆட்டிசம் குழந்தைகள்..!

கோவை நாளை தொடங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள்

கோவை: மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வரும் 19ஆம் முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இப்போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்காகத் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து வுஷு அமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர் சபீர் கூறுகையில், "மத்திய அரசின் கேலோ இந்தியத் திட்டத்தால் விளையாட்டுத் துறையில் பெண்கள் தங்களது திறமைகளைத் தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்ற வருகின்றன. வடக்கு மண்டல அளவிலான போட்டிகள் உத்தரகண்ட் மாநிலத்திலும், கிழக்கு மண்டல அளவிலான போட்டிகள் அசாம் மாநிலத்திலும், மேற்கு மண்டல அளவிலான போட்டிகள் கோவாவிலும் மற்றும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறுகின்றன.

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை "ஆஸ்மிதா" அமைப்புடன் தமிழ்நாடு வுஷு அசோசியேஷன் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகின்றனர். இதில் மொத்தம் 9 மாநிலங்கள் இருந்து சுமார் 600 வீராங்கனைகள் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

மண்டல அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக சாதனைக்கு தயாராகும் ஆட்டிசம் குழந்தைகள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.