ETV Bharat / state

வால்பாறை அருகே குட்டி யானை உயிரிழப்பு!

author img

By

Published : Nov 9, 2020, 8:02 AM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அருகே நிமோனியாவால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மூன்று வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது.

வால்பாறை அருகே குட்டியானை உயிரிழப்பு!
வால்பாறை அருகே குட்டியானை உயிரிழப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் 14ஆம் எண், தேயிலைக் காட்டில் குட்டி யானை ஒன்று உயிரிழந்ததாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர்கள், யானைக்குட்டி உயிரிழந்ததை உறுதிசெய்து சம்பந்தப்பட்ட மருத்துவருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு மருத்துவரின் பரிசோதனைக்குப் பின்பு, அப்பகுதியிலேயே குழிதோண்டி புதைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், உயிரிழந்த யானை மூன்று வயது ஆண் குட்டி யானை என்றும்; நிமோனியாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...சிட்டுக்குருவிகளின் காதலன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.