ETV Bharat / state

பெண் யானை உயிரிழப்பு - தீவிர விசாரணையில் வனத்துறை

author img

By

Published : Jan 29, 2021, 10:25 AM IST

கோயம்புத்தூர்: சிறுமுகை வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Female elephant death
Female elephant death

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெத்திகுட்டை, காப்புக்காடு, மாத்தூர் பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த பெண் யானைக்கு 25 வயது இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் யானை உயிரிழந்து இருக்கலாம் என தெரியவந்தது.

இதனிடையே, மருத்துவக் குழுவினர் இன்று (ஜன.29) யானையின் உடலை எடுத்துச் சென்று உடற்கூராய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் ஒரே மாதத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்திருப்பது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காது கிழிந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.