ETV Bharat / state

ஒற்றை காட்டு யானையை விரட்ட விவசாயிகள் கோரிக்கை

author img

By

Published : Nov 6, 2019, 7:34 AM IST

கோவை: பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானையை விரட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Farmers' demand for a single wild elephant in Pollachi, பொள்ளாச்சியில் ஒற்றை காட்டு யானையை விரட்ட விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நவமலை மலைவாழ் மக்கள் இரண்டு பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை, தற்போது ஆண்டியூர், பருத்தியூர், அர்த்தனாரி பாளையம், சேத்துமடை பகுதிகளில் முகாமிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டியூர் பகுதியில் செல்வகுமார் என்பவரை தாக்கியுள்ளது.

தொடர்ந்து அர்த்தனாரி பாளையம் ரத்தினசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்து பயிரிட்டுள்ள வாழை மரங்களை சேதப்படுத்தியதோடு, ரத்தினசாமியையும் தாக்கியுள்ளது. இதையடுத்து அர்த்தனாரி பாளையம் விவசாயிகள் ஒற்றை யானையை விரட்டக்கோரி பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் யானையால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே ஒற்றை காட்டு யானையை விரைவில் பிடிக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.

Farmers' demand for a single wild elephant in Pollachi, பொள்ளாச்சியில் ஒற்றை காட்டு யானையை விரட்ட விவசாயிகள் கோரிக்கை

இதற்கு மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து பதில் கூறுகையில், யானையைப் பிடிக்க துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு ஒற்றை காட்டு யானை விரைவில் பிடிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: யானையின் தந்தத்தை திருடிய இளைஞர்கள் கைது

Intro:former


Body:former


Conclusion:பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானை மீண்டும் அட்டகாசம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் பொள்ளாச்சி 5 கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலை மலைவாழ் மக்கள் இரண்டு பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து ஆண்டியூர் பருத்தியூர் அர்த்தனாரி பாளையம் சேத்துமடை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது இதையடுத்து வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த இரண்டு நாட்கள் முன்பு ஆண்டியூர் பகுதியில் புளியம்பட்டி செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியது நேற்று நள்ளிரவில் அர்த்தனாரி பாளையம் ரத்தினசாமி என்பவரை தோட்டத்தில் உள்ளே புகுந்து பயிரிட்டுள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி ரத்தினசாமி தாக்கியது இதை எடுத்து அர்த்தனாரி பாளையம் விவசாயிகள் பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர் விவசாயிகள் கூறுகையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை விவசாயிகளை சேதப்படுத்துவது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகிறது ஆதலால் ஒற்றை காட்டு யானையை விரைவில் பிடிக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இடம் மனு அளிக்கப்பட்டது மேலும் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து கூறுகையில் யானையைப் பிடிக்க துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு ஒற்றை காட்டு யானையை விரைவில் பிடிப்பதாக தெரிவித்தார் .(Etv பாரத் சிறப்பு செய்தி)

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.