ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு

author img

By

Published : Sep 28, 2019, 6:08 PM IST

கோவை: சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், 15 ஆயிரம் பணம் திருட்டுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொள்ளைபோன தொழிலதிபர் வீடு

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் தடாகம் சாலையில் ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனமும், பொறியியல் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகின்றார். தனது வீட்டில் இரண்டாவது தளத்தில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்புடைய வைர, தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக சாய்பாபா காலனி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

கொள்ளைபோன தொழிலதிபர் வீடு

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொள்ளைபோன வீட்டிற்கு இரண்டு வீடுகள் அடுத்து ஆதித்யா குப்தா என்பவரது வீட்டிலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நூதன முறையில் செல்ஃபோன்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் - திருடனுக்கு வலைவீச்சு!

Intro:சாய்பாபா காலனி பகுதியில் உள்ள திழில் அதிபர் வீட்டில் 25லட்சம் பணம், மற்றும் வைர நகைகள் திருட்டு.Body:கோவையில் ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை.

கோவை சாய்பாபா காலனி பாரதிபார்க் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் தடாகம் சாலையில் ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றார். மேலும் பொறியியல் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகின்றார். இவரது வீட்டில் உள்ள இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் கடந்த 26 ம் தேதி குடும்ப உறுப்பினர்கள் சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் இன்று இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புடைய வைர , தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.பக்கத்து வீட்டின் சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருட்டு சம்பவம் குறித்து தொழிலதிபர் நாராயணசாமி சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வீட்டின் முன்புறம் சிசிடிவி கேமராக்கள் இருந்த நிலையில், சிசிடிவி கேமரா கண்காணிப்பு இல்லாத பின்புறம் வழியாக சென்று திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது . எனவே வீட்டைபற்றி நன்கு அறிமுகமான நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்ட வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதும், திருட்டு நடந்த விஷயமே இரு நாட்கள் கழித்தே வெளியில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியவந்து இருப்பதும் குறிப்பிடதக்கது. கடந்த 19-ம் தேதி கொள்ளை போன வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி ஆதித்யா குப்தா என்பவரது வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.