ETV Bharat / state

வீட்டில் பிரசவம், குழந்தை உயிரிழப்பு : தாய் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Dec 7, 2021, 12:37 PM IST

கோவையில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால், பிறந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக தாய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு தாய் மீது வழக்கு பதிவு
குழந்தை உயிரிழப்பு தாய் மீது வழக்கு பதிவு

கோவை : உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி புண்ணியவதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானார். 4-வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்து வந்த புண்ணியவதி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து
தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

தொப்புள்கொடி சரியாக அறுபடாததாலும், முறையாக பிரசவம் பார்க்காததாலும் குழந்தையும், தாயும் மயங்கினர். 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயகுமார் கொண்டு சென்ற நிலையில்,
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வீட்டில் பிரசவம், குழந்தை உயிரிழப்பு : தாய் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை காவல் துறையினர் விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தையின் தாய் புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.