ETV Bharat / state

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Jun 7, 2020, 9:12 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் - ஆழியாறு அணையிலிருந்து பழைய ஐந்து வாய்க்கால்களில் 6400 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நீரை பயன்படுத்தி ஆனைமலை ஒன்றியத்தில் 2 போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டார். அதையடுத்து இன்று (ஜூன் 7) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து 146 நாட்களுக்கு 1156 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க அரசு ஆணை வழங்கியது. இதனால் ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேட்டி: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, ”சென்ற ஆண்டு 248 கோடி கால்வாய்கள் புனரமைக்க செலவிடப்பட்டதாகவும் இந்தாண்டு காண்டூர் கால்வாயை புனரமைக்க 72 கோடியும், பரம்பிக்குளம் மெயின் வாய்க்காலை புனரமைக்க 100 கோடியும் செலவிடப்பட்டது.

அதுபோல சேத்து மடைவாய்க்காலை புனரமைக்க 16 கோடி, சட்டர் மற்றும் பழுதுபார்க்க 58 கோடி, குடிமராமத்து பணிகளுக்கு 7.1 கோடி இந்தாண்டு செலவிட உள்ளதாகவும், பல்வேறு அரசுகள் நிறைவேற்ற முடியாது என்ற ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் பாண்டியாறு - பொன்னம்பலாறு திட்டம் நடக்கும் என்று நம்பிக்கை ஊட்டி நடத்தி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர். மேலும் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தால் சென்றாண்டு நீர் மேலாண்மை பெருகி தண்ணீர் தட்டுப்பாடு இல்லை” என்றார்.

இதில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மாவட்ட எஸ்பி, சார் ஆட்சியர் வைத்தியநாதன், முன்னாள் எம்பி, மேலும் பரம்பிக்குள ஆழியாறு திட்ட பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகக் குடியிருப்புகள் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.