கோவை - மேட்டுப்பாளையம் சாலையினை காட்டு யானைக் கூட்டம் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையானது விரிவுபடுத்தப்பட்டு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இடிகரை வனப்பகுதியிலிருந்து சாலையை கடந்து பெரிய பண்ணாரி வனப்பகுதிக்குள் ஏழு யானைகள் கொண்ட கூட்டம் சாலையை கடந்து சென்றது.
யானைக் கூட்டம் சாலையை கடக்க இருக்கும் நிலையில் வனத்துறையினர் இன்று அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர், யானைக் கூட்டம் சாலையைக் கடக்க உதவி செய்தனர்.
யானைகள் சாலையை கடக்கும்போது சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு கடந்து சென்றன. யானைகள் கடந்துசென்ற பின் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிக்க: அழியும் நிலையில் உள்ள அரியவகை மகுடம் சூடிய பட்டாம்பூச்சி!