ETV Bharat / state

ரம்ஜானை முன்னிட்டு களைகட்டிய அன்னூர் ஆட்டு சந்தை.. ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை அமோகம்!

author img

By

Published : Apr 15, 2023, 4:08 PM IST

கோவை அன்னூர் சந்தையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இன்று நடந்த ஆட்டு சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரம்ஜானை முன்னிட்டு களைகட்டிய அன்னூர் சந்தை.. ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை அமோகம்!
ரம்ஜானை முன்னிட்டு களைகட்டிய அன்னூர் சந்தை.. ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை அமோகம்!

ரம்ஜான் தினத்தை முன்னிட்டு, கோவை அன்னூர் சந்தையில் இன்று விற்பனை களைகட்டியது

கோயம்புத்தூர்: அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதேநேரம் இந்த பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால், கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் அன்னூர் சந்தையில், விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், வார இறுதி நாளான இன்று (ஏப்ரல் 15), அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டத் தொடங்கியது. இங்கு ஆட்டுச் சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் வந்தனர்.

இங்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு மற்றும் மலையாடு உள்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக, ஆட்டுக் குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் காரணமாக, இன்று ஒரே நாளில் 1 கோடி ருபாய்க்கும் மேல் அன்னூர் சந்தையில் விற்பனை நடைபெற்றுள்ளது. அதேநேரம், வாரச் சந்தை களைகட்டியதால் தேநீர் கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க: தாறுமாறாக விலை ஏறும் பூக்கள்... மகிழ்ச்சியில் பூ வியாபாரிகள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.