ETV Bharat / state

4 சக்கர வாகனங்களில் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்தும் திட்டம் தொடக்கம்!

author img

By

Published : Feb 28, 2023, 6:44 PM IST

கோவையில் நான்கு சக்கர வாகனங்களில் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

4 சக்கர வாகனங்களில் குப்பைத் தொட்டி
4 சக்கர வாகனங்களில் குப்பைத் தொட்டி

கோவை: திறந்தவெளியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோயும் பரவுகிறது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசும், சில தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் "யங் இந்தியா" தன்னார்வ அமைப்பு, பல்வேறு சமூக சேவைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் எளிய வடிவிலான குப்பைத் தொட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை முதற்கட்டமாக மாநகர காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது, சாலைகளில் குப்பையை வீசாமல் இருப்பதற்காக இந்த முயற்சியை யங் இந்தியா அமைப்பு முன்னெடுத்துள்ளது.

கோவையில் காவல் நிலைய வாகனங்கள், ரோந்து வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு, பிரத்யேக குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் பிற அரசு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "யங் இந்தியா அமைப்பின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. அமைப்பின் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.