சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா(55). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பகதூர் என்பவரிடம் 10 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பகதூர் பலநாட்களாக திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
![WOMEN SUICIDE ATTEMPT POLICE COMMISSIONER OFFICE காவல்துறை ஆணையாளர் அலுவலகம் பெண் தீக்குளிக்க முயற்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4048648_thee-1-2.bmp)
இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஃபாத்திமா புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த ஃபாத்திமா, காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு திடீரென மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி ஃபாத்திமாவை காப்பாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.