ETV Bharat / state

கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்தது? சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

author img

By

Published : Apr 29, 2021, 8:09 PM IST

சென்னை: கரோனா பரவலை தடுப்பதற்காக, கடந்த 14 மாதங்களில் மத்திய அரசு என்ன செய்தது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாக பரவிவருகிறது. கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது அவர்,'இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது'எனக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

கரோனாவை தடுக்க நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா பேரிடரின்போது, அவ்வப்போதைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்க கூடாது என அறிவுறுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.