ETV Bharat / state

அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று!

author img

By

Published : Apr 1, 2019, 2:23 PM IST

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

வட மற்றும் உள் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பைவிட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்ப நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் வானம் தெளிவாக இருக்கும் எனவும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01/04/2019
வானிலை மையம் அறிவிப்பு :

வட மற்றும் உள் தமிழகத்தில் அடுத்த இரண்டு  தினங்களுக்கு அனல் காற்று ( வெப்ப அலை ) வீசும்....உள் தமிழகத்தில் இயல்பை விட 3 முதல் 5டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்...

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது,இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னை,திருவள்ளுவர், காஞ்சிபுரம்,வேலூர்,
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,நாமக்கல்,திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 
அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 3டிகிரி முதல் 5டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் இதனால் அனல் காற்று  (வெப்ப அலை) வீசும் என்றும்  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது....

சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.