ETV Bharat / state

'கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை' - வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Jun 7, 2019, 8:12 PM IST

சென்னை: "தென்மேற்கு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் கேரளாவில் நாளைமுதல் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்" என்று, சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்மேற்கு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுரளக்கோடு, சிவலோகம் பகுதியில் 1 செ.மீ மழை பெய்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெப்பநிலை பொறுத்தவரையில் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்ககூடும். சென்னையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை. ஆனால் வெப்பம் படிப்படியாக குறையும்" என்றார்.

கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்

"தென் கிழக்கு அரபிக் கடலில் தென் மேற்கு பருவ காற்று வலுவடைந்துள்ளது. 

தென்னிந்தியாவின் தெற்கு பகுதியில் வலிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு மேற்காக காற்று திசை மாறும் பகுதி நிலவுகிறது.

தென்மேற்கு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் நாளை ஜீன் 8 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் மழையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கன்னியாகுமரி சுரளக்கோடு மற்றும் சிவலோகம் பகுதியில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வெப்பத்தை பொறுத்தவரையில் 2 முதல் 3 டிகரி வரை அதிகமாக வீசக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை என்றம்" வெப்பம் படிப்படியாக குறையும் என்று அவர் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.