ETV Bharat / state

அடுத்து மூன்று தினங்களுக்கு அனல் காற்று...! வானிலை மையம் எச்சரிக்கை

author img

By

Published : May 22, 2019, 8:17 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

summer

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்பதால், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பயணங்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் மற்ற சில இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைப்பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.