ETV Bharat / state

தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தைக்கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

author img

By

Published : Jul 16, 2022, 10:09 PM IST

தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தைக்கூட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் போதை பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
தமிழ்நாட்டில் போதை பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 34ஆவது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பாமக சார்பில் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பின்னர், ‘அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, மது ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்போம்’ போன்ற 10 உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “திமுக ஓராண்டு ஆட்சியில், பத்து மாத காலம் கரோனாவில் சென்றுவிட்டது. அதில் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி விழா
பாட்டாளி மக்கள் கட்சி விழா

திமுக சிறப்பான ஆட்சிக்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் வேகம் போதாது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டை முழுமையாக தடை செய்ய குழு பரிந்துரை செய்தும், இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. கடந்த வாரம்கூட கோயம்புத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் உயரிழந்தார். சூதாட்டத்திற்கு தடைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய பின்னர், இதுவரை 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருந்தும் ஏன் சட்டத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துகின்றனர் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தைக் கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருட்கள் அதிகரித்துவிட்டன. கஞ்சா, மாத்திரை, ஊசி போன்ற போதைப்பொருட்கள் மாணவர்களிடம் எளிதாக கிடைக்கிறது. போதைப்பொருட்கள் தொடர்பாக அரசு அவசர கூட்டத்தைக்கூட்ட வேண்டும்.

அதில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். காவல் துறை நினைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் போதை விற்பனையை தடை செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலம் கொடுக்க முயற்சித்த தாய் கைது!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.