ETV Bharat / state

போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தயங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

author img

By

Published : Jun 26, 2023, 7:00 PM IST

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன் என டிடிவி தினகரன் திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்துக் கழகங்களில் காலி பணியிடங்களை நியமிக்க திமுக அரசு தயக்கம் டிடிவி தினகரன் கேள்வி
போக்குவரத்துக் கழகங்களில் காலி பணியிடங்களை நியமிக்க திமுக அரசு தயக்கம் டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன், என டிடிவி தினகரன் என திமுக அரசை கண்டித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உட்பட ஒரே நேரத்தில் 600-700 பேர் ஓய்வு பெறுவதால் பேருந்து இயக்கம் மேலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்இடிசி) மற்றும் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) உட்பட 8 போக்குவரத்துக் கழகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில் 18,723 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உட்பட 1.16 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதில் போக்குவரத்து ஊழியர்கள் பற்றாக்குறை என குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராசன் தெரிவித்திருந்தார். சென்னையில் 900 பேருந்துகள் ஆள் பற்றாக்குறையால் தினசரி இயக்கப்படாமல் உள்ளது என்றும் இதனால், தொழிலாளர்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது என்றும் இதனால் தமிழக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டது. மேலும் அதற்கு மாற்றாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த, இப்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்த நினைப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் முடிவு என்பது திமுக அரசுக்கு தெரியாதா? காலிப்பணியிடங்களில் நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காமல் மாற்று காரணங்களை முன்னிறுத்தி, தொடர்ந்து காலதாமதம் செய்வதன் பின்னணி மர்மம் என்ன?

ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி முடித்த எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், விடியா அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் வாக்குறுதி படி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? தமிழக அரசு இனியும் இளைஞ்ரகளின் எதிர்காலத்திலும், பொது மக்களின் பாதுகாப்பிலும் மெத்தனம் காட்டாமல் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு சொல்லியிருக்கிறார்? - உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.